search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "தொழிலாளி கொலை"

    • கணேசன் திருவண்ணாகோவில்பட்டியில் கோவில் ஊழியம் உள்ளிட்ட கிடைக்கும் வேலைகளை செய்து சாப்பிட்டு வந்தார்.
    • கொலைக்கான காரணம்? கொலையாளிகள் குறித்து உடனடியாக தெரியவில்லை.

    விராலிமலை:

    புதுக்கோட்டை மாவட்டம், இலுப்பூர் அருகே உள்ள எண்ணை ஊராட்சிக்கு உட்பட்ட திருவண்ணாகோவில்பட்டியை சேர்ந்தவர் கணேசன்(வயது 59).

    இவருக்கு திருமணமாகி மனைவி மற்றும் 2 மகன்கள் உள்ளனர். சென்னையில் குடும்பத்துடன் வசித்து வந்த கணேசன், கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு பின் சொந்த ஊரான திருவண்ணாகோவில்பட்டிக்கு வந்தார்.

    பின்னர் அவர் சென்னைக்கு செல்லவில்லை. மனைவி மற்றும் மகன்கள் சென்னையில் வசித்து வருகின்றனர்.

    இந்த நிலையில் கணேசன் திருவண்ணாகோவில்பட்டியில் கோவில் ஊழியம் உள்ளிட்ட கிடைக்கும் வேலைகளை செய்து சாப்பிட்டு வந்தார். இன்று (வியாழக்கிழமை) அதிகாலை தனது வீட்டில் முன் அமர்ந்திருந்தார்.

    அப்போது வாகனத்தில் வந்த சில மர்மநபர்கள் கணேசனை கற்கள் மற்றும் கட்டைகளால் கொடூரமாக தாக்கினர். இதில் அவரது முகம் சிதைந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். பின்னர் கொலையாளிகள் அங்கிருந்து தப்பி சென்றனர். காலையில் விவசாய வேலைக்குச் சென்ற கூலி தொழிலாளிகள் இலுப்பூர் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடம் விரைந்து வந்து கொலை செய்யப்பட்டு கிடந்த கணேசன் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

    கொலைக்கான காரணம்? கொலையாளிகள் குறித்து உடனடியாக தெரியவில்லை. சென்னையில் வசிக்கும் அவரது மனைவி மகன்களுக்கு தகவல் கொடுக்கப்பட்டுள்ளது. கோவில் ஊழியம் செய்து வந்த தொழிலாளி அடித்து கொலை செய்யப்பட்ட சம்பவம் அந்த கிராமத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • செல்போன் பறிக்கும் முயற்சியில் தொழிலாளியை கொன்று உடலை கடலில் வீசிய சம்பவம் காசிமேடு பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
    • காசிமேடு பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமிரா காட்சிகளை போலீசார் ஆய்வு செய்தனர்.

    ராயபுரம்:

    ஆந்திரா மாநிலத்தை சேர்ந்தவர் லோகேஸ்வரன் (வயது 45). இவர் சென்னை காசிமேடு பகுதியில் தங்கி மீன்பிடிக்கும் தொழிலில் ஈடுபட்டு வந்தார்.

    இந்த நிலையில் நேற்று மதியம் காசிமேடு பழைய மீன்வார்ப்பு பகுதியில் உள்ள கடலில் லோகேஸ்வரன் பிணமாக கிடந்தார். அவரது உடலில் ரத்த காயங்கள் காணப்பட்டன. மர்ம நபர்கள் அவரை அடித்து கொலை செய்து விட்டு உடலை கடலில் வீசி இருப்பது தெரிந்தது.

    இதனால் அதிர்ச்சி அடைந்த அப்பகுதி மக்கள் காசிமேடு மீன்பிடி துறைமுக போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் விரைந்து வந்து லோகேஸ்வரனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஸ்டான்லி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    இது தொடர்பாக காசிமேடு பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமிரா காட்சிகளை ஆய்வு செய்தனர். இதில் சம்பவம் நடந்த இடத்தில் இருந்து காசிமேடு அண்ணாநகர் குடிசை பகுதியை சேர்ந்த சாமுவேல் (வயது 21), சஞ்சய் (21) ஆகியோர் தப்பி செல்வது பதிவாகி இருந்தது.

    இதையடுத்து அவர்கள் 2 பேரையும் போலீசார் பிடித்து விசாரித்தனர். இதில் அவர்கள் சேர்ந்து செல்போன், பணம் பறிக்கும் முயற்சியில் லோகேஸ்வரனை அடித்து கொன்று விட்டு உடலை காசிமேடு கடலில் வீசி விட்டதாக தெரிவித்தனர்.

    இதைத்தொடர்ந்து சாமுவேல், சஞ்சய் ஆகிய 2 பேரையும் போலீசார் கைது செய்தனர். அவர்கள் போலீசாரிடம் அளித்துள்ள வாக்குமூலத்தில் கூறியிருப்பதாவது:-

    காசிமேடு கடற்கரையில் மது குடித்துக் கொண்டிருந்த லோகேஸ்வரனை மிரட்டி செல்போன் மற்றும் பணத்தை பறிக்க முயன்றோம். ஆனால் அவர் பணம்-செல்போனை கொடுக்க மறுத்து தப்பி ஓட முயன்றார். கடற்கரையில் ஓடியபோது லோகேஸ்வரன் தவறி கீழே விழுந்தார்.

    ஆத்திரத்தில் இருந்த நாங்கள் அருகில் கிடந்த உடைந்த ஓடு மற்றும் கல்லால் லோகேஸ்வரனின் தலை, முகத்தில் தாக்கினோம். இதில் பலத்த காயம் அடைந்த அவர் சம்பவ இடத்தில் இறந்து போனார். உடனே அவரிடம் இருந்த செல்போன், பணத்தை எடுத்துக்கொண்டோம். பின்னர் லோகேஸ்வரனின் உடலை கடல் தண்ணீரில் வீசிவிட்டு தப்பி சென்றோம். உடல் வேறு இடத்தில் கரை ஓதுங்கிவிடும் என்பதால் போலீசாரிடம் இருந்து தப்பி விடலாம் என்று நினைத்தோம். ஆனால் அதே பகுதியில் உடல் கரை ஒதுங்கியதால் போலீசாரின் விசாரணையில் சிக்கிக் கொண்டோம்.

    இவ்வாறு அவர்கள் கூறி உள்ளதாக போலீசார் தெரிவித்து உள்ளனர். கைதானவர்களிடம் இருந்து லோகேஸ்வரனின் செல்போன் பறிமுதல் செய்யப்பட்டது. கொலையுண்ட லோகேஸ்வரன் அப்பகுதிக்கு எதற்காக வந்தார் என்று தெரியவில்லை. மேலும் அவரை பற்றிய வேறு எந்த விபரமும் இல்லை. இதைத்தொடர்ந்து ஆந்திரா போலீசாருக்கு லோகேஸ்வரன் பற்றி தகவல் தெரிவித்து உள்ளனர். அவரது செல்போனில் கடைசியாக பேசிய நபர்கள் குறித்த விபரத்தையும் சேகரித்து வருகிறார்கள்.

    செல்போன் பறிக்கும் முயற்சியில் தொழிலாளியை கொன்று உடலை கடலில் வீசிய சம்பவம் காசிமேடு பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • மது குடிக்க பணம் கேட்ட பிரச்சினையில் தொழிலாளி கொலை செய்யப்பட்ட சம்பவம் ராஜபாளையம் பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
    • கொலை தொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார் தலைமறைவான கார்த்தீஸ்வரனை தேடி வருகின்றனர்.

    ராஜபாளையம்:

    விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் செண்பக தோப்பு ரோடு பகுதியில் உள்ள மருதுநகரை சேர்ந்தவர் ராயப்பன் (வயது 52), கட்டிட தொழிலாளி. இவருக்கு மது பழக்கம் இருந்தது.

    ராயப்பனும், அதே பகுதியில் உள்ள இந்திரா நகரை சேர்ந்த கார்தீஸ்வரன் (40) என்பவரும் சேர்ந்து மது குடிப்பது வழக்கம். கார்த்தீஸ்வரன் அடிக்கடி ராயப்பனிடம் மது குடிக்க பணம் வாங்கி செல்வார்.

    அதன்படி சம்பவத்தன்று காலை குறிஞ்சி நகர் விலக்கு டீக்கடை முன்பு ராயப்பன் நின்று கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த கார்த்தீஸ்வரன் மது குடிக்க பணம் கேட்டுள்ளார். ஆனால் அவர் தர மறுக்கவே 2 பேருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.

    இதில் ஆத்திரம் அடைந்த கார்த்தீஸ்வரன் அருகில் இருந்த பழைய இரும்பு பொருட்கள் கடையில் வைக்கப்பட்டிருந்த டி.வி.யை எடுத்து ராயப்பன் தலையில் போட்டார். இதில் டி.வி. கண்ணாடி உடைந்து அவரது தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. ரத்த வெள்ளத்தில் சரிந்து விழுந்த ராயப்பன் சம்பவ இடத்திலேய பரிதாபமாக இறந்தார்.

    இதுகுறித்து உறவினர் சித்திரை முத்து ராஜபாளையம் வடக்கு போலீசில் புகார் செய்தார். இன்ஸ்பெக்டர் ரமேஷ்கண்ணா மற்றும் போலீசார் சம்பவ இடம் வந்து விசாரணை நடத்தி உடலை மீட்டுபிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    இந்த கொலை தொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார் தலைமறைவான கார்த்தீஸ்வரனை தேடி வருகின்றனர்.

    மது குடிக்க பணம் கேட்ட பிரச்சினையில் தொழிலாளி கொலை செய்யப்பட்ட சம்பவம் ராஜபாளையம் பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

    • கொலை சம்பவம் தொடர்பாக 302 பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்து போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.
    • தாக்குதலை தடுக்க வந்த மிஸ்ராவின் நண்பருக்கும் லேசான காயம் ஏற்பட்டுள்ளது.

    புதுடெல்லி:

    டெல்லி ஷஹபாத் பால் பண்ணை பகுதியில் ஒருவர் கொலை செய்யப்பட்டு சடலமாக கிடப்பதாக போலீசாருக்கு தகவல் வந்தது. இதையடுத்து சம்பவ இடத்திற்கு சென்ற துணை ஆணையாளர் ரவி குமார் சிங் தலைமையிலான போலீசார், அந்த உடலை கைப்பற்றினர். இச்சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.

    போலீசார் நடத்திய விசாரணையில், கொலை செய்யப்பட்ட நபர் சஞ்சய் மிஸ்ரா (வயது 35) என்பதும், பீடி தகராறில் கொலை நடந்ததும் தெரியவந்துள்ளது.

    அதன் விவரம் வருமாறு:-

    மகாதேவ் சௌக் அருகே உள்ள காலி பகுதி வழியாக சஞ்சய் மிஸ்ரா தனது நண்பருடன் சென்று கொண்டிருந்தார். அப்போது அதே பகுதியை சேர்ந்த சத்யவான் என்பவர் மிஸ்ராவிடம் பீடி கேட்டுள்ளார். இதற்கு மிஸ்ராவும், அவரது நண்பரும் திட்டியுள்ளனர். இதனால் ஆத்திரம் அடைந்த சத்யவான் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து மிஸ்ராவின் உடலில் பல இடங்களில் குத்தியுள்ளார். இதனை தடுக்க வந்த மிஸ்ராவின் நண்பருக்கும் லேசான காயம் ஏற்பட்டுள்ளது. உடலில் பல இடங்களில் காயம் அடைந்த சஞ்சய் மிஸ்ரா சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.

    • வேலையை முடித்து விட்டு சேகரும், புருஷோத்தமனும் மதுகுடித்தனர்.
    • புகாரின்பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து தப்பிஓடிய புருஷோத்தனை தேடிவருகின்றனர்.

    ஓசூர்:

    வேலூர் மாவட்டம் ஓட்டோரி பகுதியைச் சேர்ந்தவர் சேகர் (வயது50). அதே பகுதியைச் சேர்ந்தவர் புருஷோத்தமன்.

    நண்பர்களான இருவரும் கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் பேரண்டபள்ளி பகுதியைச் சேர்ந்த முருகன் என்பவருக்கு சொந்தமான லாரிக்கு பாடிகட்டும் பட்டறையில் வேலை செய்து வந்தனர்.

    இந்த நிலையில் நேற்று வேலையை முடித்து விட்டு சேகரும், புருஷோத்தமனும் மதுகுடித்தனர். அப்போது பணம் கொடுக்கல், வாங்கல் தொடர்பாக இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது.

    இதில் ஆத்திரமடைந்த புருஷோத்தன், சேகரை இரும்பு கம்பியால் தாக்கினார். இதில் பலத்த காயமடைந்த அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு ஓசூர் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.

    இதுகுறித்து முருகன் ஓசூர் போலீசாரிடம் புகார் தெரிவித்தார். புகாரின்பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து தப்பிஓடிய புருஷோத்தனை தேடிவருகின்றனர்.

    • டாஸ்மாக் கடை முன் ரத்தக்காயங்களுடன் பிணமாக கிடந்தார்
    • வேலூர் ஜெயிலில் அடைத்தனர்

    ஆரணி:

    ஆரணி கொசப்பா ளையம் பெரிய சாயக்கார தெருவை சேர்ந்தவர் பிரகாஷ் (வயது 50). சலவை தொழிலாளி. இவருக்கு சரஸ்வதி என்ற மனைவியும், சுரேஷ்குமார், ஜெயக்குமார் என்ற 2 மகன்களும் உள்ளார்.

    பிரகாஷ் மது அருந்தி வருவ தால் அவரை விட்டு மனைவி சரஸ்வதி, மகன் ஜெயக்குமார் சென்னையில் வசித்து வரு கின்றனர்.

    நேற்று முன்தினம் இரவு ஆரணி காந்தி ரோட் டில் உள்ள டாஸ்மாக் கடைக்கு பிரகாஷ் மதுபானம் வாங்க சென்றதாக கூறப்படு கிறது. அதன்பின் அவர் வீடு திரும்பவில்லை.

    அவரை மகன் சுரேஷ்கு மார் தேடிச்சென்றபோது டாஸ்மாக் கடை முன் பிரகாஷ் ரத்தக்காயங்களுடன் பிணமாக கிடந்தார். இது குறித்து ஆரணி டவுன் போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் ஆரணி டவுன் போலீஸ் சப்-இன்ஸ் பெக்டர் மகேந்திரன், உடலை கைப்பற்றி வழக்குப் பதிவு செய்தார்.பின்னர் பிரேத பரிசோத னைக்காக பிரகாஷ் உடலை திருவண்ணாமலை மருத்து வக் கல்லூரிக்கு போலீசார் அனுப்பி வைத்தனர்.

    உடலில் ரத்தக்காயங்கள் இருப்பதால் அவரை யாரும் கொலை செய்தனரா? போதையில் தடுமாறி விழுந்து இறந்தாரா? அல்லது வேறு ஏதும் காரணமா? என போலீசார் விசாரித்து வந்தனர்.

    இந்தநிலையில் ஆரணி பஜார் பகுதியில் பழவியாபாரம் செய்து வரும் கனகம்பட்டு பகுதியைச் சேர்ந்த முனியாண்டி(வயது 37) என்பவர் பிரகாசை கொலை செய்தது தெரியவந்தது.

    மது அருந்துவது தொடர்பாக ஏற்பட்ட தகராறில் கொலை நடந்துள்ளது.

    போலீசார் முனியாண்டியை கைது செய்தனர். அவரை வேலூர் ஜெயிலில் அடைத்தனர்.

    • வாக்குவாதம் முற்றவே ஆத்திரம் அடைந்த நண்பர்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து அங்கிருந்த கட்டையை எடுத்து விஜயராகவனை சரமாரியாக தாக்கினர்.
    • கால்வாயை திறந்து பார்த்த போது உள்ளே வாலிபர் ஒருவர் இறந்த நிலையில் கிடந்தார்.

    சூலூர்:

    திருவாரூரை சேர்ந்தவர் ரவி (60). இவரது மகன் விஜயராகவன் (வயது44). இவருக்கு திருமணமாகி விட்டது.

    திருமணம் ஆன சில ஆண்டுகளிலேயே கணவன், மனைவிக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டது.

    இதனால் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டில் விஜயராகவனை அவரது மனைவி பிரிந்து சென்று விட்டார். இதன் காரணமாக விஜயராகவன் தனியாக வசித்து வந்தார்.

    இந்த நிலையில் விஜயராகவன் திருவாரூரில் இருந்து கோவை செங்கத்துறைக்கு வந்தார்.

    அங்கு தனது தந்தை ரவி மற்றும் நண்பர் ஸ்டாலின் (45) ஆகியோருடன் தங்கி கட்டிட வேலைக்கு சென்று வந்தார். இவர்களுடன் திருவாரூரை சேர்ந்த மேலும் சிலரும் தங்கி இருந்தனர்.

    இவர்கள் அனைவரும் ஒன்றாகவே வேலைக்கு செல்வது, குடிப்பது வழக்கம். தினமும் குடித்து விட்டு தகராறில் ஈடுபடுவதும், பின்னர் அவர்களே சமாதானம் அடைவதையும் வாடிக்கையாக வைத்துள்ளனர்.

    நேற்று விடுமுறை என்பதால் முந்தைய நாள் இரவு விஜயராகவன், அவரது தந்தை ரவி, ஸ்டாலின் மற்றும் நண்பர்கள் அனைவரும் ஒன்றாக மதுகுடிக்க சென்றனர்.

    டாஸ்மாக் கடைக்கு சென்று மது வாங்கி குடித்தனர். பின்னர் அருகே உள்ள ஓட்டலில் சாப்பிட சென்றனர்.

    அங்கு சாப்பிட்டு கொண்டிருந்த போது, அவர்களுக்கு இடையே திடீரென தகராறு ஏற்பட்டது.

    இதில் வாக்குவாதம் முற்றவே ஆத்திரம் அடைந்த நண்பர்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து அங்கிருந்த கட்டையை எடுத்து விஜயராகவனை சரமாரியாக தாக்கினர்.

    இதில் பலத்த காயம் அடைந்த அவர் ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்து விட்டார்.

    அவர் இறந்து போனதால் நண்பர்கள் அதிர்ச்சி அடைந்தனர். பின்னர் விஜயராகவனின் உடலை அங்கிருந்து சாக்கடை கால்வாய்க்குள் தூக்கி வீசி விட்டு உடல் வெளியில் தெரியாத படி பலகையை போட்டு மூடி விட்டு தப்பியோடி விட்டனர்.

    நேற்று ஓட்டல் திறக்க வந்த ஊழியர்கள், கடையின் முன்பு ரத்தக்கறை படிந்து இருந்ததாலும், அருகே உள்ள கால்வாய் திடீரென மூடப்பட்டிருந்ததாலும் அதிர்ச்சி அடைந்தனர்.

    கால்வாயை திறந்து பார்த்த போது உள்ளே வாலிபர் ஒருவர் இறந்த நிலையில் கிடந்தார். உடனே இதுகுறித்து அவர்கள் சூலூர் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். இன்ஸ்பெக்டர் மாதையன் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து உடலை மீட்டனர்.

    பின்னர் அந்த பகுதிகளில் இருந்த கண்காணிப்பு கேமிராவை ஆய்வு செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில் கால்வாயில் கிடந்தது விஜயராகவன் என்பதும், அவரை அவரது நண்பர்கள் அடித்து கொன்று சாக்கடையில் வீசியதும் தெரியவந்தது.

    தொடர்ந்து போலீசார் கொல்லப்பட்ட விஜயராகவனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக சூலூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த சூலூர் போலீசார் விஜயராகவனை மது குடித்த போது ஏற்பட்ட தகராறில் நண்பர்கள் அடித்து கொன்றனரா? அல்லது வேறு ஏதாவது காரணமா? என்ற கோணத்தில் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    இந்த வழக்கில் தொடர்புடைய ஸ்டாலின் உள்பட அனைவரும் திருவாரூரை சேர்ந்தவர்கள். இதனால் இவர்கள் அங்கு சென்றிருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கின்றனர்.

    இதையடுத்து அவர்களை பிடிப்பதற்காக தனிப்படையும் அமைக்கப்பட்டுள்ளது. தனிப்படையினர் அவர்களை பிடிப்பதற்காக திருவாரூக்கு விரைந்துள்ளனர். அவர்கள் பிடிபட்ட பின்னரே கொலைக்கான முழுமையான காரணம் தெரியவரும் என போலீசார் தெரிவித்தனர்.

    • பாலமுருகனின் கழுத்து, காது உள்ளிட்ட இடங்களில் ரத்தம் வழிந்து காணப்பட்டது.
    • பிரேத பரிசோதனை அறிக்கையில் பாலமுருகன் தாக்கி கொலை செய்யப்பட்டது தெரிய வந்தது.

    வருசநாடு:

    தேனி மாவட்டம் கண்டமனூர் கணேசபுரம் கிழக்கு தெருவைச் சேர்ந்தவர் பாலமுருகன் (வயது 45). கூலித்தொழிலாளி. இவரது மனைவி போதுமணி (40). இவர்களுக்கு சூர்யா (24), சுகன் (22) ஆகிய 2 மகன்கள் உள்ளனர்.

    பாலமுருகனுக்கு குடிப்பழக்கம் இருந்துள்ளது. தினமும் குடித்து விட்டு வீட்டில் தனது மனைவி மற்றும் மகன்களுடன் தகராறு செய்து வந்துள்ளார். இந்நிலையில் நேற்று முன்தினம் பாலமுருகன் அவரது வீட்டிலேயே இறந்து கிடந்தார்.

    இதுகுறித்து சித்தாபட்டி கிராம நிர்வாக அதிகாரி சுரேஷ்குமார் கண்டமனூர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர். சந்தேக மரணம் என வழக்கு பதிவு செய்து இன்ஸ்பெக்டர் சத்தியபிரபா, சப்-இன்ஸ்பெக்டர் பிரேம் ஆனந்த் தலைமையிலான போலீசார் விசாரணை நடத்தினர்.

    அவரது குடும்பத்தினரிடம் கேட்டபோது பாலமுருகன் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டதாக தெரிவித்தனர்.

    ஆனால் பாலமுருகனின் கழுத்து, காது உள்ளிட்ட இடங்களில் ரத்தம் வழிந்து காணப்பட்டது. பிரேத பரிசோதனை அறிக்கையில் பாலமுருகன் தாக்கி கொலை செய்யப்பட்டது தெரிய வந்தது. இதனால் அவரது குடும்பத்தினரிடம் போலீசார் நடத்திய கிடுக்கிப்பிடி விசாரணையில் கொலை செய்ததை ஒப்புக்கொண்டனர்.

    தினமும் குடித்து விட்டு தகராறு செய்ததால் அவரது கழுத்தை கயிறால் இறுக்கி கொலை செய்ததாக அவர்கள் ஒத்துக்கொண்டனர். இதனைத் தொடர்ந்து போலீசார் போதுமணி மற்றும் அவரது மகன்கள் 2 பேரையும் கைது செய்தனர்.

    • கணவன்-மனைவிக்கு இடையே அடிக்கடி குடும்ப தகராறு ஏற்பட்டு வந்துள்ளது.
    • கோவிந்தன் சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து பரிதாபமாக இறந்தார்.

    தருமபுரி,

    தருமபுரி மாவட்டம், நல்லம்பள்ளி அருகே உள்ள பாளையம்புதூர் காமராஜ் நகரை சேர்ந்தவர் கோவிந்தன் (வயது43). கட்டிட தொழிலாளி. இவரது மனைவி மாதம்மாள் (39).

    இவர்களுக்கு மாரியப்பன் என்ற மகனும், நாகரத்தினம் என்ற மகளும் உள்ளனர். கோவிந்தனுக்கு மது குடிக்கும் பழக்கம் இருந்து வந்தது. குறிப்பாக, கணவன்-மனைவிக்கு இடையே அடிக்கடி குடும்ப தகராறு ஏற்பட்டு வந்துள்ளது.

    இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு மது குடித்து விட்டு போதையில் வீட்டுக்கு வந்த கோவிந்தன் மனைவி மாமாளிடம் தகராறு செய்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த மாதம்மாள், அடுப்பூதும் இரும்பு குழாயால் கணவனின் தலை மீது அடித்துள்ளார். இதில் கோவிந்தன் சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து பரிதாபமாக இறந்தார்.

    இந்த சம்பவம் குறித்து கிராம நிர்வாக அலுவலர் கிருஷ்ணன் தோப்பூர் போலீசில் புகார் செய்தார். அந்தபேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று கொலை செய்யப்பட்ட கோவிந்தனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக தருமபுரி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இந்த கொலை தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தினர்.

    அப்போது போலீசாரிடம் மாதம்மாள் கூறினார் எனது கணவர் கோவிந்தன் தினமும் மதுபோதையில் வீட்டுக்கு வந்து என்னிடம் தகராறு செய்ததால் அவரை இரும்பு குழாயால் அடித்துக்கொலை செய்தேன். இதையடுத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து மாதம்மாளை கைது செய்தனர். கைதான அவரை கோர்ட்டில் ஆஜர்படுத்தி சேலம் சிறையில் அடைத்தனர்.

    • கோவிந்தராஜீக்கு மது அருந்தும் பழக்கம் உள்ளது. இதனால் கணவன்-மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது.
    • போலீசார் வழக்குபதிவு செய்து தலைமறைவான மாதம்மாளை தேடி வருகின்றனர்.

    தருமபுரி:

    தருமபுரி மாவட்டம், தொப்பூர் அடுத்துள்ள பாளையம்புதூர் காமராஜ் நகர் பகுதியை சேர்ந்தவர் கோவிந்தராஜ் (வயது43), இவரது மனைவி மாதம்மாள் (39).

    இந்த நிலையில் கோவிந்தராஜீக்கு மது அருந்தும் பழக்கம் உள்ளது. இதனால் கணவன்-மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது.

    நீ இப்படி தினமும் மது குடித்து விட்டு வந்தால் எப்படி குடும்பம் நடத்துவது என்று மாதம்மாள் கேட்டுள்ளார். இதனால் நேற்று மீண்டும் இருவருக்கும் தகராறு நடந்துள்ளது. இதில் ஆத்திரம் அடைந்த மாதம்மாள், தனது கணவர் என்று கூட பாராமல் கோவிந்தராஜை அடுப்பு பற்ற வைக்க பயன்படுத்தப்படும் ஊது குழலால் தலையில் சரமாரியாக அடித்துள்ளார்.

    இதனால் வலி தாங்க முடியாமல் அவர் அலறினார். பின்னர் சிறிது நேரத்தில் கோவிந்தராஜ் துடி துடித்து உயிரிழந்தார்.

    இதை பார்த்து அக்கம்பக்கத்தினர் ஓடி வந்தனர். அவர்கள் வருவதற்குள் மாதம்மாள் அங்கிருந்து தப்பி சென்று விட்டார்.

    இது குறித்து பாளையம்புதூர் கிராம நிர்வாக அலுவலர் கிருஷ்ணனுக்கு கிராம மக்கள் தகவல் கொடுத்தனர்.

    அவர் வந்து பார்வையிட்டு இது பற்றி தொப்பூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர்.

    குடும்ப தகராறு காரணமாக அடித்து கொலை செய்யப்பட்ட கோவிந்தன் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக தருமபுரி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்தனர்.

    இது தொடர்பாக போலீசார் வழக்குபதிவு செய்து தலைமறைவான மாதம்மாளை தேடி வருகின்றனர்.

    • சமுத்திரகாடு என்னும் வனப்பகுதியில் மூர்த்தி இறந்து கிடந்தார்.
    • மூர்த்தியின் மரணம் தொடர்பாக சமூக வலைத்தளங்களில் பரவி வரும் தகவலால் ஏற்காட்டில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

    ஏற்காடு:

    சேலம் மாவட்டம் ஏற்காடு அருகே காக்கம் பாடி கிராமத்தை சேர்ந்த மெய்யன் மகன் மூர்த்தி (வயது 38). இவருக்கு திருமணமாகி மனைவி மற்றும் 2 குழந்தைகள் உள்ளனர். இவர் ஆடு மேய்க்கும் தொழில் செய்து வந்தார்.

    இந்த நிலையில் கடந்த ஏப்ரல் மாதம், மூர்த்தி ஆடுகளுக்கு இலை வெட்டுவதற்காக வனப்பகுதிக்கு சென்றார். அதன் பின்னர் அவர் வீடு திரும்பவில்லை. மேலும் மூர்த்திக்கு அடிக்கடி வலிப்பு வருவது வழக்கம். இதனால் அவர் எங்கு சென்றார்? என்ன ஆனார்? என்று அவரது வீட்டினர் தேடி வந்தனர்.

    இதனிடையே அவரது கிராமத்திற்கு அருகில் உள்ள சமுத்திரகாடு என்னும் வனப்பகுதியில் மூர்த்தி இறந்து கிடந்தார். இதுகுறித்த தகவலின் பேரில் அங்கு சென்ற ஏற்காடு போலீசார் மூர்த்தி உடலை கைப்பற்றி, சேலம் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தினர்.

    மூர்த்தி இறப்பதற்கு 3 நாட்கள் முன்பு இருந்தே தனக்கு அடிக்கடி தலை சுற்றல் வருவதாக கூறி மருத்துவமனைக்கு சென்று, மருந்துகள் வாங்கி வந்து சாப்பிட்டுள்ளதும் தெரியவந்தது. தொடர்ந்து விசாரணைக்கு பின்னர் மூர்த்தி உடல் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.

    பின்பு அவரது உடல் அடக்கம் செய்யப்பட்டது. இதனிடையே சம்பவம் நடந்து 2 மாதங்களுக்கு பின்னர் மூர்த்தி சாவு குறித்து சமூக வலைதளங்களில் தகவல் பரவியது. மூர்த்தி கொலை செய்யப்பட்டதாகவும், அவரை 7 பேர் கொண்ட கும்பல் சுட்டு கொன்று விட்டதாகவும் அதில் கூறப்பட்டு உள்ளது.

    இதுகுறித்து ஏற்காடு இன்ஸ்பெக்டர் செந்தில்ராஜ்மோகனிடம் கேட்ட போது, இந்த சம்பவம் தொடர்பாக நன்கு விசாரணை நடத்தப்பட்டது. மேலும் உடல் கூறு ஆய்வில் மூர்த்தியின் உடலில் ஏற்பட்ட காயங்கள் குச்சி குத்தி ஏற்பட்டது தான் என் உறுதியாக தெரியவந்த பின்பு தான் நாங்கள் இயற்கை மரணம் என முடிவு செய்தோம்.

    சமூக வலைத்தளத்தில் இவ்வாறு அவதூறு பரப்புவது தவறு. மேலும் தேவைப்பட்டால் மூர்த்தியின் உடலை மறுஆய்வு செய்ய தயாராக உள்ளோம் எனவும், இவ்வழக்கில் மீண்டும் விசாரணை நடத்தப்படும் எனவும் தெரிவித்தார்.

    மூர்த்தியின் மரணம் தொடர்பாக சமூக வலைத்தளங்களில் பரவி வரும் தகவலால் ஏற்காட்டில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. அந்த தகவல் உண்மையாக இருக்கும் பட்சத்தில் அவரை சுட்டு கொன்றதாக கூறப்படும் 7 நபர்கள் யார்? என்றும் கேள்வி எழுதுள்ளது. எனவே இந்த விசயத்தில் போலீசார் மீண்டும் விசாரணை நடத்தி உண்மை விவரங்களை தெளிவுபடுத்தவேண்டும் என்று ஏற்காடு பகுதி மக்கள் வலியுறுத்தி உள்ளனர்.

    • தினமும் மது குடித்துவிட்டு வந்து சுனிதாவிடம் தகராறு செய்தார்.
    • நல்லப்ப ரெட்டி மீது ரமேஷ் ரெட்டிக்கு ஆத்திரம் ஏற்பட்டது.

    திருப்பதி:

    ஆந்திர மாநிலம், அனந்தபூர் மாவட்டம் வெமுலா பள்ளியை சேர்ந்தவர் நல்லப்ப ரெட்டி (வயது 47). இவரது மனைவி கிருஷ்ணவேணி. இருவரும் தனியார் கிரானைட் தொழிற்சாலையில் வேலை செய்து வந்தனர்.

    கிருஷ்ணவேணியின் தங்கை சுனிதாவுக்கும், நந்தியாலா மாவட்டம் ராவணூரை சேர்ந்த ரமேஷ் ரெட்டிக்கும் திருமணம் நடந்தது. திருமணத்திற்கு பிறகு ரமேஷ் ரெட்டி மதுப்பழக்கத்திற்கு ஆளானார்.

    இதனால் ரமேஷ் ரெட்டியையும், சுனிதாவையும், நல்லப்பரெட்டி தான் வேலை செய்யும் கிரானைட் தொழிற்சாலையில் வேலைக்கு சேர்த்து, தங்களுடனே தங்க வைத்துக் கொண்டார்.

    ரமேஷ் ரெட்டி மதுப்பழக்கத்திற்கு ஆளானது மட்டும் இன்றி, தான் சம்பாதிக்கும் பணத்தை சூதாட்டத்திலும் இழந்து வந்தார்.

    தினமும் மது குடித்துவிட்டு வந்து சுனிதாவிடம் தகராறு செய்தார். மதுப்பழக்கத்தை கைவிடும் படி நல்லப்ப ரெட்டி, ரமேஷ் ரெட்டியிடம் வற்புறுத்தி வந்தார்.

    இதனால் நல்லப்ப ரெட்டி மீது ரமேஷ் ரெட்டிக்கு ஆத்திரம் ஏற்பட்டது. நேற்று இரவு அனைவரும் சாப்பிட்டு விட்டு வீட்டுக்கு வெளியே கட்டிலில் தூங்கிக்கொண்டு இருந்தனர்.

    அப்போது மதுபோதையில் பெட்ரோல் கேனுடன் வீட்டுக்கு வந்த ரமேஷ் ரெட்டி அங்கு தூங்கிக்கொண்டு இருந்த நல்லப்ப ரெட்டி, அவரது மனைவி கிருஷ்ணவேணி, மகள் பூஜிதா ஆகியோர் மீது பெட்ரோலை ஊற்றி தீ வைத்தார். இதில் 3 பேரின் உடல்களும் தீப்பற்றி எரிய தொடங்கியது. 3 பேரும் அலறியபடி ஓடினர்.

    அலறல் சத்தம் கேட்ட அக்கம்பக்கத்தினர் ஓடி வந்தனர். அவர்கள் மீது தண்ணீரை ஊற்றி தீயை அணைத்து சிகிச்சைக்காக கர்னூல் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.

    அங்கு சிகிச்சை பலனின்றி நல்லப்பரெட்டி பரிதாபமாக இறந்தார். மேலும் கிருஷ்ணவேணி, பூஜிதா ஆகியோர் கவலைக்கிடமாக சிகிச்சை பெற்று வருகின்றனர்.

    இதுகுறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து ரமேஷ் ரெட்டியை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

    ×